இந்திய பவுலர்களை டார்… டாரா… கிழித்து… நியூசிலாந்து வெற்றி!

இதையடுத்து தற்போது இந்திய அணி 3 போட்டிகல் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்முதல் ஒருநாள் போட்டி ஹாமில்டனில் நடந்தது.

பின்னர் 348 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. மார்ட்டின் கப்தில், ஹென்றி நிக்கோல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம்இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 15.4 ஓவரில் 85 ரன்னாக இருக்கும்போது மார்ட்டின் கப்தில் 41 பந்தில் 32 ரன்கள்சேர்த்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த சீனியர் டெய்லர் மிரட்டல் அடி ஆட்டத்தை கையாண்டார். இவருக்கு கேப்டன் லேதம் நல்ல கம்பெனி கொடுத்தார். ஒரு முனையில் லேதம் நிதானமான ஆட்டத்தை கையாளமறுமுனையில் சீனியர் டெய்லர் இந்திய பவுலர்களை கண்ணாபின்னான்னு கிழித்து தொங்கவிட்டார். சிக்சரும், பவுண்டரி களுமாக பறக்கவிட்ட டெய்லர், ஒருநாள் அரங்கில் தனது 21ஆவது சதத்தை பதிவுசெய்தார்.

இதற்கிடையில் லேதம் (69) அரைசதம் கடந்து அவுட்டானார்.

ஆனால் தொடர்ந்து அனுபவ டெய்லர் அணியை வெற்றி ப்பாதைக்கு முன்னேற்றி சென்றார். ஜேம்ஸ்நீசம் (9) வந்தவேகத்தில் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து வந்த கிராண்ட் ஹோம் (5) நிலைக்கவில்லை. இதையடுத்து நியூ சிலாந்து அணி 48.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 348 ரன்கள்எடுத்து 4 விக்கெட்வி த்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசி லாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள்போட்டி வரும் 8ஆம் தேதி ஆக்லாந்தில் நடக்கிறது.

இப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணி பவுலர்கள் சேர்ந்து மொத்தமாக 43 ஒய்டு வீசினர். இது இதுவரை இல்லாத அளவு அதிக ஒய்டு பந்துகள் வீசப்பட்ட போட்டியாக அமைந்தது. இதில் நியூசிலாந்து அணியின் பவுலர்கள் மொத்தமாக 19 ஒய்டுகள் வீசினர். இந்திய பவுலர்கள் அதைவிட அதிகமாக 24 ஒய்டுகள் வீசினர். இதில் யார்க்கர் கிங் பும்ரா மகாமோசமாக 13 ஒய்டு வீசினார்.

சதம் அடித்த ராஸ் டெய்லர் 108 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க நியூசிலாந்து 48.1 ஓவரில் 348 ரன்களை எட்டிநான் குவிக் கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாம்லாதம் 48 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 69 ரன்கள் எடுத்தார்.